வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் தீயிட்டு எரிப்பு: முரண்பாடு காரணமென சந்தேகம்

breaking
வடதமிழீழம்: வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாடுகளே மோட்டார் வண்டி எரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்படுகிறது. வீட்டு உரிமையாளரால் கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.