காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லைத்தீவிலும் போராட்டம்

breaking
  சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ‘சர்வதேச சிறுவர் தினம் தமிழ் சிறுவர்களுக்கு சாபக்கேடா’, ‘சிங்கள அரசின் சிறைக்கூடம் எங்கள் சிறுவர்களின் கல்விக் கூடமா?’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழீழத்தின் பல  பகுதிகளில்  இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.