லெப். கேணல் தில்லையழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
லெப். கேணல் தில்லையழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் 02.10.2000 அன்று “ஓயாத அலைகள் 04” படை நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதல்களின் போது வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் தில்லையழகன் / தில்லை உட்பட ஏனைய 10 மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   “வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் மறவர்கள் ” லெப்.கேணல் தில்லையழகன் / தில்லை, கபிரியேல் அருந்தவராஜன் – முருங்கன், மன்னார். கப்டன் ஆரதி, நாராயணன் ராணி – கந்தர்மடம், யாழ்ப்பாணம். கப்டன் நேசமலர், வெள்ளையன் கலா – கல்மடு, வவுனியா. கப்டன் பவநீதன், செபஸ்ரியான் சந்தான்குரூஸ் – தாழ்வுபாடு, மன்னார். வீரவேங்கை சிவா, புவனேந்திரன் சசிக்குமார் – உரும்பிராய், யாழ்ப்பாணம். வீரவேங்கை மணிமாறன், மரியநாயகம் மரியபிறவுன்சன் – மாந்தை, மன்னார். வீரவேங்கை கருவேங்கை, விஜயன் சுரேந்திரன் – கச்சாய், யாழ்ப்பாணம். வீரவேங்கை தணிகைச்செல்வன், சுந்தரலிங்கம் தருமரூபன் – கல்வயல், யாழ்ப்பாணம். சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன், நாகராசா லக்ஸ்மன் – களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு. சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பத்மன் / பத்மசீலன், துரைசிங்கம் சற்குணநாதன் – தொண்டமனாறு, யாழ்ப்பாணம்   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”