யாழ். கோட்டைக்குள் விகாரை அமைக்க பேரினவாத இராணுவம் முயற்சி

breaking
  வடதமிழீழம்: யாழ்.கோட்டைக்குள் விகாரை ஒன்றை கட்டுவதற்கு இராணுவத்தினா் முயற்சித்துள்ளநிலையில் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் விகாரை அமைப்பதை அறித்த யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள், மற்றும் பொதுமக்கள் இணைந்து விகாரை அமைப்பை தடுத்து நிறுத்தியுள்ளனா். கடந்த வருடம் யூன் மாதம் யாழ்.கோட்டையின் உட்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதன் பிற்பாடு அங்கு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அந்த முகாமில் இருக்கின்ற இராணுவத்தினர் பௌத்த விகாரையினை அங்கு அமைக்க முற்பட்டபோது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.