பதட்டத்தில் பரபரக்கும் கொழும்பு : சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீட்பு

breaking
  கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகள் மொரட்டுவ, ராவதாவத்தப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாளை சென்ட் மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.