துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை.!

breaking
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் கோபார்சாஹி பகுதியில் ஐசிஐசிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த ஆறு கொள்ளையர்கள், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் ரூபாய் 8,05,115- யை கொள்ளையடித்தனர். மேலும் வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த, இந்த சம்பவத்தால் வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.