நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி .!

breaking
நெதர்லாந்தில்  2019ம் ஆண்டுக்கான தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி 05-10-2019 சனிக்கிழமை அல்க்மார் நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழீழ மண்ணிற்காய் முதல் வித்தான மாவீரர் லெப்.சங்கர் அவர்களினதும் கேணல் சங்கர் அவர்களினதும் வீரவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 11.00மணியளவில் நெதர்லாந்திலுள்ள கரப்பந்தாட்டக் கழகங்கள்  பங்குபற்ற வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இறுதியில் 5பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் 3ம் இடத்தினை அல்க்மார் நண்பர்கள் விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை பேவர்வைக்ஜொலிபோய்ஸ் யு விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை பேவர்வைக் தமிழர் ஒன்றிய யு விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டன. பின்னர் இடம் பெற்ற 4பேர் கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 3ம்இ;டத்தினை பேவர்வைக்​ஜொலிபோய்;;ஸ் யு விளையாட்டுக் கழகமும் 2ம் இடத்தினை அல்க்மார் நண்பர்கள் விளையாட்டுக் கழகமும் 1ம் இடத்தினை பேவர்வைக்; தமிழர் ஒன்றிய யு விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன. பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்ய சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் சுமார் 23.00 மணியளவில் வெற்றி பெற்ற கழகங்களிற்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு அனைவரின் கைதட்டலுடன் இனிதே நிறைவுற்றது.