திபெத்திய மாணவர் சங்கத் தலைவர் சென்னையில் அதிரடியாக கைது.!

breaking
சென்னைக்கு வரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக கருப்பு கொடி காட்டத் திட்டமிட்டுருந்த திபெத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் டென்சின் நோர்பு, திபெத் நாட்டை சேர்ந்தவர். இவர், திபெத்திய மாணவர் சங்கத் தலைவராகவும், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டத் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை பாலவாக்கத்தில் இருந்த டென்சின் கைது செய்யப்பட்டார்.