ஶ்ரீலங்கா: கோத்தாபயவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்த விவகாரம்தொடர்பில் நீதிமன்றில் எழுத்தாணை மனுத்தாக்கல் செய்த காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து குற்றப்பு புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் 'செட்டியோராரி' எழுத்தானை மனுவை தாக்கல் செய்தமைக்காக தாம் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் குற்றப்பு புலனாய்வுப் பிரிவினர் என்ற அழைக்கப்படும் சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்துள்ளனர்.
இவ்வாறு மரண அச்சுறுத்தலை எதிர்கொள்வதானது வேள்ளை வேன் காலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.