சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டாமென வலியுறுத்தல்

breaking
அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொது மக்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக 1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது எழுத்து மூலம் அல்லது தொலைநகல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி :- தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலக்கம் 330, தலவத்துக்கொட வீதி, மாதி வெல தொலைநகல் :- 0112 778 815 மின்னஞ்சல் :- [email protected]‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.