காணாமல் போயிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் 4 நாட்களின் பின் கண்பிடிக்கப்பட்டார்

breaking
  4 நாட்­க­ளாக காணா­மற்­போ­யி­ருந்த கொக்­குவில் இந்துக் கல்­லூரி மாணவன், இணுவில் சின்னப் பள்­ளிக்­கூடம் பகு­தியில் நேற்றுக்காலை 10 மணி­ய­ளவில் நட­மா­டிய வேளை பொது மக்­களால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்­டுள்ளார். மாணவன் தற்­போது சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்குட்ப­டுத்­தப்­பட்­டுள்ளார். யாழ். நக­ரி­லுள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 4 நாட்­க­ளாக தங்­கி­யி­ருந்­ததாக அவர் பொலிஸ் வாக்­கு­மூலத்தில் தெரி­வித்­துள்ளார். உடு­விலை சேர்ந்த 16 வயது பாட­சாலை மாணவன் வீட்­டி­லி­ருந்து கடந்த 10ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை, மருந்து எடுப்­ப­தாகக் கூறிச் சென்­ற ­நி­லையில் இரவு வரை வீடு திரும்­பா­ததால் மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை தாயாரால் சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்யப்­பட்­டது. உடுவில் அம்­ப­ல­வாணர் வீதியைச் சேர்ந்த சுந்­த­ர­லிங்கம் ஜனுக்சன் (வயது -16) என்ற கொக்­குவில் இந்துக் கல்­லூ­ரியில் பயிலும் மாண­வனே இவ்­வாறு காணா­மல் ­போ­யி­ருந்தார். இந் நிலையில் 4 நாட்­களின் பின்னர் நேற்றுக்காலை 10 மணி­ய­ளவில் இணுவில் சின்னப் பள்­ளிக்­கூடம் பகு­தியில் மாணவன் நட­மா­டிய வேளை பொது மக்­களால் அடை­யாளம் காணப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார். பொலிஸ் விசா­ர­ணை­க­ளுக்­காக அவர் தற்­போது சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். தான் கடந்த 4 நாட்­க­ளாக யாழ்ப்­பாணம் நகரில் உள்ள தனியார் விடு­தியில் தங்­கி­யி­ருந்த­தாக குறிப்­பிடும் மாணவன், யார் அழைத்துச் சென்றார்கள் அல்லது யாருடன் தங்கியிருந்தார் உள்ளிட்ட மேலதிக தகவல்களை தெரிவிக்கிறார் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்