இந்தாட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?

breaking
இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக விக்கிரவாண்டி தொகுதிக்குச் சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், நடனமாடி வாக்கு கேட்டு கலகலப்பூட்டியிருக்கிறார். தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். [video width="400" height="224" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/10/அமைச்சர்-கருப்பண்ணன்-அவர்கள்-நடனமாடிய-காட்சி??????.mp4"][/video] அவர்களை ஆதரித்துப் பேச, விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் இருதரப்புத் தலைவர்களும், வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகின்றனர். இந்நிலையில்,  நேற்று அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கருப்பண்ணன், கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக பறை இசைக் கலைஞர்கள் பறையை இசைத்துக்கொண்டிருந்தனர். அந்த இசையின் பின்னணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த அமைச்சர் கருப்பண்ணன், திடீரென நடனமாட ஆரம்பித்தார். அமைச்சரின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத தொண்டர்களும் பொதுமக்களும், கைத்தட்டி ஆரவாரம் செய்ததோடு அவர்களும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினர். சிறிது நேரம் அவர்களுடன் நடமனாடிய அமைச்சர் கருப்பண்ணன், வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்தார்.