ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்: அச்சத்தில் மக்கள், பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள்
வடதமிழீழம்: முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை காட்டு யானை உள்நுழைந்ததன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலை சென்ற மாணவர்களும் வீடு திரும்பியுள்ளனர்.
மக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானை தொடர்பாக பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.