முழுமுதற்க் கடவுள் பிள்ளையார் என தமிழர்கள் ஏன் சொல்கிறார்கள்.?

breaking
இறையியல் மெய்பொருள் காண்பதறிவு தமிழர்களின் வழிபாடு-வாழ்வியல் முறை தமிழர்கள் வழிபாடு என்பதால் தமிழர்கள் பெரிதும் வணங்கும் அதை விட தமிழ்ப்பெண்கள் வணங்கும் முதல் கடவுள் முழுமுதல் கடவுள் எனப்படும் பிள்ளையார் பற்றி காண்போம். பிள்ளையார் யார்? பிள்ளையாருக்கும் தமிழ்பெண்களுக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு என்பதை அறிவீரோ.? தமிழர்களின் பொதுவான பண்பு யாதெனில் உலகில் உள்ள பல்லுயிர்களையும் பண்புகளையும் வணங்குவதே மனித உருவாக்கத்திற்கு மூலமே கரு தான் ஒரு முழு கரு தோன்றலுக்கு அதை காப்பதே முதன்மையாகும்.தற்காலத்தில் செல்வம் என்றால் பணம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .ஆனால் முன்காலத்தில் செல்வம் என்றால் மக்கட்செல்வம் தான் .நமக்கு நீர் வேண்டுமென்பதால் நீரை பெரிதும் வணங்குகிறோம் . வானை நோக்கி மழையை பெற வேண்டுகிறோம் ,ஆற்றில் நீர் வருகையை மலரிட்டு வரவேற்கிறோம் ,வணங்குகிறோம் .அதுபோல தான் மனித பெருக்கத்திற்கு மூலக்கருவான கருவை வேண்டி வணங்குவதே பிள்ளையார் வழிபாடாகும். ஒரு பெண்ணின் கரு வலுபெற ,அதன் குறைகள் நீங்க ஒரே ஒரு அருமருந்து எதுவென்றால் அது அரச மரத்திற்கு ஈடாகாது . உலகத்திலே தமிழர்களுக்கு மட்டும் தான் தனித்துவ வழிபாடு முறை உள்ளது . நீங்களே உற்றுநோக்கலாம் . நம் பெண்களுக்கு மட்டுமே உண்டான வழிபாடு ,அதில் பெண்களை தவிர ஆண்களுக்கு அனுமதியில்லை ஒரு ஆண்டில் மூன்று மாதங்களில் பெண்கள் மட்டும் கூடி பூசை செய்வது வழக்கம் அதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் அழைப்பர் அம்மாயி சாமி, ஔவையார் சாமி, செவ்வாய்பிள்ளையார்னு.   கும்பிடுவாங்க கொழுக்கட்டை பிடித்து அதில் பச்சைஅரிசி,தேங்காய் மட்டுமே இருக்கும்... இவ்வழிபாட்டிற்கும் பிள்ளையாருக்கும் மிகுந்த தொடர்பு இருக்கு.. ஆனால் ,தற்காலத்தில் வழக்கில் உள்ள வழிபாட்டிற்கும் இதில் குறிப்பிடுகிற பிள்ளையாருக்கும் தொடர்பில்லை மேலே குறிப்பிட்ட வழக்கம் நம் தமிழ் மரபினரிடையே மட்டும் தான் உள்ளது.... தமிழகத்தை தாண்டி வேறெங்கும் இந்த வழக்கம் கிடையாது...

பிடிச்சு வச்ச பிள்ளையார் செவ்வாப்பிள்ளையார் மஞ்சப்பிள்ளையார் சாணப்பிள்ளையார் அரிசி பிள்ளையார்னு

எதற்காக கையில் பிடித்து வழிபாட்டிற்கு முன் வைக்கின்றனர் என்று தங்கள் வீட்டு பெண்களிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் மறந்தா மாசி அசைஞ்சா ஆடி பொறந்தா தை   இது தான் நம் பெண்களிடம் அதை வலியுறுத்தி வரும் செவி வழி செய்தி... இதன் வெளி அர்த்தம்  விதைத்து அறுவடை செய் என்ற வேளாண் சொல்லாக இருக்கும் ஆனால், உள் அர்த்தம்  குழந்தை தொடர்புடையதே. யானை முகத்தோட உள்ள வடிவம் உண்மையில் யானைக்காக மட்டுமே சிலை நிறுவினர் காரணம்  வணிகர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது யானையே நாம் வழிபடும் பிள்ளையாருக்கும் யானைக்கும் தொடர்பே கிடையாது... யானை முகம் போல் உள்ள வடிவத்தை உற்று நோக்கினால் நமது உடலின் முக்கிய உறுப்பின் வடிவமே சுவாசத்திற்கு,இரத்த சுழற்சிக்கு,உணவு செரிமானத்திற்கான 5 உறுப்புகளின் வடிவம் இருக்கும்... இன்னும் பல தகவல்கள் உள்ளது  அவைகள் ஆய்வில் உள்ளதால் உறுதியான தகவல்களுடன் பின் வரும் கட்டுரைகளில் தொடர்கிறோம் .. உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த பெண்களிடம் முடிந்தால் இதை பற்றிய கருத்துக்களை பெற்று  எமக்கு பின்னூட்டமிடுங்கள் பின்தொடருங்கள் தமிழர்களின் மெய்யியலை அறிய -தாரகம் இணையத்திற்க்காக சிவபாலன்