வவுனியாவில் இராணுவத்தினரின் வேலியில் நேர்த்தி பொருட்கள் :

breaking
வடதமிழீழம்: இராணுவ முகாமின் முட்கம்பி வேலியில் ஆலயத்தின் நேர்த்திக்கடன் செய்த தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வவுனியாவிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமிலேயே தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. வவுனியாவின் பெரிய முகாமான ஜோசெப் முகாமிற்கு எதிராக, ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆலயம் இது. ஏ9 வீதியால் பயணிக்கும் பௌத்த,இந்து மதத்தை சேர்ந்த பலர் இந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டே செல்வார்கள். இதன்போது ஆலயத்தில் நேர்த்தி செய்யும் பக்தர்கள் , தேசிக்காய் உள்ளிட்டவற்றை தற்போது, ஜோசெப் முகாம் முள்வேலியிலேயே கட்டி தொங்க விடுகிறார்கள். இந்நிலையில் தெய்வக்குற்றமாகி விடும் என்ற அச்சத்திலேயோ என்னவோ, இராணுவத்தினரும் அவற்றை அகற்றவில்லை. அதோடு தயவுசெய்து இந்த இடத்தில் எதையும் தொங்க விடாதீர்கள் என அறிவித்தல் பலகை ஒன்றை மட்டும் இராணுவத்தினர் நட்டுவைத்துள்ளனர்.