உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் மரணம்

breaking
  ஏ9 வீதி முறுகண்டிக்கு அண்மையில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ம ரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 6.10 மணியளவில் கொக்காவில் சந்திக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் முன்னால் இடம்பெற்றது. ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி நோக்கிச் சென்ற உழவு இயந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி அதே வீதி வழியாகச் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நெஞ்சுப்பகுதி பலமாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.