ஶ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 102 வாக்களிப்பு நிலையங்கள்

breaking
ஶ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 102 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் இராணுவம் விமானப்படை கடற்படை ஆகியோருக்கு 52 நிலையங்களில் வாக்களிப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளையும், மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு 50 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட உதவி தேர்தல் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கு கிளிநொச்சி மாவட்டம் 8 வளையங்களாக பிரிக்கப்பட்டு 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 292 தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையாற்றும் வகைகள் ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறும் என மாவட்ட உதவித் தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.