கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.!

breaking
கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட மேஜர் பசிலன், லெப். கேணல் தூயவன், லெப். கேணல் அறிவு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலி மேஜர் வித்தி மற்றும் வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன், திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரர்களின் வீரவணக்கக் நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து 08.11.1994 சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான A 838 “பபதா” கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி / வேதமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   முல்லை மாவட்டத்தில் 08.11.1987 அன்று இந்தியப் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய வன்னி மாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசீலன் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் பூநகரி கடற்பரப்பில் 08.11.1999 அன்று தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன் / திலக் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் 08.11.2006 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”