பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019

breaking
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் நேற்று 09.11.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற்றது. மாவீரர் திருஉருவப்படத்திற்கான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின. நேற்று பேச்சு போட்டிகள் தெரிவுப்  போட்டிகளாக இடம்பெற்றன. இன்று  10.11.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச் சோலை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பேச்சு மற்றும் 13.00 மணிக்கு பாட்டு ஆகிய போட்டிகள் இறுதிப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.