அயோத்தி தீர்ப்பு தலைவர்கள் கருத்து.!

breaking
புதுடெல்லி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த தீர்ப்பு இந்தியாவின் சமூக இழையை பலப்படுத்தும். இந்த வரலாற்று தீர்ப்புக்கு பின்னர் அனைவரும் அமைதியை, நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி அயோத்தி விவகாரத்தில், ஜனநாயக நாட்டின் மக்கள் என்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். நாம் அனைவரும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி அயோத்தி தீர்ப்பால் நான் நியாயப்படுத்தப்பட்டுள்ளேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். அனைவரும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சுப்ரீம் கோர்ட்டு ஒருமனதாக வழங்கிய தீர்ப்பு, நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண உதவி உள்ளது. அனைவரும் வரவேற்க வேண்டும். மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே ராமர் கோவில் போராட்டத்தில் கரசேவகர்களின் தியாகம் வீணாகவில்லை. ராமர் கோவில் விரைவாக கட்டப்பட வேண்டும். தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மரியாதைக்குரிய நீதிபதிகள் எடுத்துள்ள ஒருமனதான முடிவை மதிக்க வேண்டும். அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும். பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. நாம் மதிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் தேவே கவுடா இது ஒரு சமநிலையான முடிவு. நான் வரவேற்கிறேன். கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மிகப்பெரிய பிரச்சினை. அதனுள் நான் செல்ல விரும்பவில்லை. மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சுப்ரீம் கோர்ட்டு மிகத்தெளிவான, ஒருமனதான தீர்ப்பை வழங்கி உள்ளது. அனைவரின் உணர்வுகளும் தீர்ப்பில் மதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை. அனைவரும் முழு மனதோடு தீர்ப்பை வரவேற்போம். சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவட்டும். மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. இதை நாம் மதிக்க வேண்டும். எந்த வகையிலும் உற்சாகத்தை, கொண்டாட்டத்தை, போராட்டத்தை வெளிப்படுத்தி விடக்கூடாது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுப்ரீம் கோர்ட்டு முடிவை வரவேற்கிறோம். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டும். இனி யாரும் மறுஆய்வு கோரக்கூடாது. இது எனது வேண்டுகோள். ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தீர்ப்பு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும். ஆந்திர முதல்–மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தீர்ப்பை மதிப்போம் என இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளனர். தீர்ப்பையொட்டி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைக்கிற வகையில் கருத்து வெளியிடக்கூடாது. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. பல்லாண்டு கால பிரச்சினை, முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும். பா.ஜனதா துணைத்தலைவர் சிவராஜ் சிங் சவுகான் இந்த வழக்கில் யாருக்கும் தோல்வி இல்லை. அனைவரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். வரவேற்க வேண்டும். வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். இரு சமூகத்தினருக்கும் மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும் கொண்டு வந்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ். இது வரலாற்று தீர்ப்பு. மிகப்பெரிய ராமர் கோவில் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தருவது வரவேற்கத்தக்கது.