கொலைக் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கிய மைத்திரி

breaking
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவருக்கு ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கே மைத்திரி இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்த ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் டீ.எம்.ஜே.டபில்யூ தென்னகோன் தெரிவித்துள்ளார். மைத்திரி தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். நன்னடத்தையின் கீழ் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொலையுண்ட யுவதியின் சகோதரி குறித்த மன்னிப்பு தொடர்பில் மைத்திரிக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் அணண்மையில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.