வடதமிழீழம்: கிளிநொச்சி அம்பாள்குளம் சேவியர்கடை சந்தி பகுதியில் 16 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துளளனர்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மாங்குளம் பொலிசார் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.