ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான இன அழிப்பு சூத்திரதாரி கோத்தபாயவின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவவொருவருக்கும் 5000 ரூபா தரப்படும் என கூறி பஸ்களில் அழைத்து வரப்பட்டதுடன் கூட்டத்தில் பங்கு பற்றியோருக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது
பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது .
மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதானிக்கமுடிந்தது .