ஶ்ரீலங்கா செல்லக்கதிர்காமம் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

breaking
  செல்லக்கதிர்காமம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செல்லக்கதிர்காமம் தனமல்வில வீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.