டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்- போலீசாரிடையே தள்ளு முள்ளு.!

breaking
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கல்விக் கட்டண உயர்வு, ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மாணவர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலை (ஏ.ஐ.சி.டி.இ) நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல விரும்பினர், ஆனால் அங்கு துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு  போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு போடப்பட்டு உள்ளது.