இந்த பயணத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் தனது 71-வது பிறந்தநாளை இந்தியாவிலேயே கொண்டாட திட்டமிட்டு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
பிறந்தநாளில் பஞ்சாப் அமிதசர்சில் உள்ள சீக்கிய பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளார். இந்த பயணத்தில் சார்லசுடன் அவருடைய மனைவி இளவரசி கமீலா வரவில்லை.
சார்லஸ், நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அவருடன் கமீலா இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸ் இதுவரை 10 முறை இந்தியாவுக்கு வந்து இருப்பது குறிப்பிடதக்கது.