தமிழையும் தலைவரையும் போற்றிப் புகழும் குருதிஸ்தான் குடிமகன்.!

breaking
குருதிஸ்தான் உணவக உரிமையாளர்: தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்.... நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம்.
குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். 'தலைவர் பிரபாகரன்' பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்..... தொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதிஸ்தான் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியதாகவும் அப்படிப் பயிற்சிபெற்ற போராளிகளை 'வன்னியில் பயிற்சிபெற்றவர்' என பெருமிதமாக தங்கள் சமூகம் அழைப்பதாகவும் சொன்னார். அவர்களில் பலர் தற்போது தளபதிகளாக இருப்பதாகவும் 'பால்ராஜ் வியூகம்' என்ற பாடம் கூட தங்கள் போராளிகளுக்கு கற்பிக்கப்படுபதாகவும் சொன்னார். தமிழ்மொழி மொழிகளின் தாய்...... தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல ஒடுக்கபடும் அனைவருக்குமானவர். மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு குருதிஸ் மக்களையும் அழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேற்படி உணவகம் 803 மார்கம் வீதி ஸ்காபுறோவில் அமைந்திருக்கிறது. அருமையான சாப்பாடு. ஒரு மாறுதலை விரும்புபவர்கள் மேற்படி உணவகத்துக்கு செல்லாம். -திரு சிங்கம்  முக நூல் பதிவு