ஒட்டுக்குழுக்களின் ஒத்தாசையுடன் மட்டக்களப்பில் எல்லை மீறும் மொட்டு

breaking
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் வேட்பாளர்களின் பதாகைகள் காட்சிப்படுத்த முடியாது என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்ற ஒட்டுக்குழுக்களின் அட்டகாசத்துடன் பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மட்டக்களப்பு நகரின் மத்தியில் காணப்படும் இந்த தேர்தல் அலுவலகத்திற்கு சுமார் 300மீற்றர் தூரத்தில் வாக்களிப்பு நிலையமும் அமைந்துள்ளது. எனவே, குறித்த பதாகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.