இடம்பெற்றுவரும் சிறிலாங்கா ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திருகோணமலை, குருணாகலை, வவுனியா, மொனராகலை, அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 60 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், புத்தளம், கம்பஹா, களுத்துறை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
காலி மாவட்டத்தில் 67 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் முல்லைத்தீவில் 55 சதவீத வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 61 சதவீத வாக்குப்பதிவும், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 57 சதவீத வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.