முழுமையான முடிவுகளின் முன்பே வெற்றிக் கொண்டாட்டத்தில் கோத்தா அணி

breaking
  நடைபெற்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார் என உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய வெற்றி பெற்று விட்டார் என்ற தகவல், அவர்களின் தகவல் மூலங்களின் வழியாக, தற்போது பெற்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து தற்போது, வெற்றிக் கொண்டாட்டங்கள் மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்குள்ளும், பொதுஜன பெரமுனவிற்குள்ளும் ஆரம்பித்துள்ளது. சற்று முன்னர் தொலைபேசியில் கோட்டாவை தொடர்பு கொண்டு, மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்ததாக அறிய முடிகிறது. வாக்கெண்ணும் நிலையங்களின் முடிவுகளின் பிரகாரம் இரண்டு வேறுபட்ட அறிக்கைகள் மஹிந்த தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டிலும் சற்று வேறுபட்ட வாக்கு எண்ணிக்கை குறிப்பிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு அறிக்கைகளின்படியும் 2- 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டாபய வெற்றிபெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.