தான் வகித்த அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியின் ஊடகச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
“மக்கள் ஆணையை மதித்து, விளையாட்டு, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன். ஐ.தே.கவில் எனது கட்சி பொறுப்புகளிலிருந்தும் நான் விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்”என்று அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்