கோத்தாவுக்கு வாக்களிக்காத மலையகத் தமிழர்களை தாக்கிய பேரினவாத கும்பல் (காணொளி)

breaking
  யட்டியாந்தோட்டையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று நேற்று (18) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்திலே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பொலிஸாரின் விசாரணையில் மதுபோதையினாலே இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை என கூறப்பட்டுள்ளது. தற்போது பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.     https://youtu.be/l_vjc6xmJD4