தேர்தலன்று தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள்

breaking
  காலி – தலா­பிட்­டிய மற்றும் இரத்­தி­ன­புரி நிவித்­தி­கல – கெட்­ட­னி­கே­வத்த பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்­தி­ன­புரி – நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகுதியில் நேற்று பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். மேலும் பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடத்­து­வது தெரியவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.