மைத்திரிக்கு நன்றி சொன்ன கோத்தா

breaking
ஶ்ரீலங்கா: முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்­றிய சேவைக்கு எனது கௌர­வ­மான நன்­றியை தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தனது கட­மை­களை பொறுப்­பேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்­து­கொண்­டி­ருந்தார். இந்­நி­லையில் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி இட்­டி­ருந்த டுவிட்டர் பதி­வி­லேயே இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ இட்­டி­ருந்த டுவிட்டர் பதிவில் “ இந்த நாட்டின் ஏழா­வது ஜனா­தி­பதி என்ற வகையில் எனது கட­மை­களை இன்று (நேற்று) காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்­க­ளிப்­புடன் நடை­பெற்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்­றிய சேவைக்கு எனது கௌர­வ­மான நன்­றியை தெரி­விக்­கின்றேன்”” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.