கோத்தபாயவுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் !

breaking
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சஷ வெற்றி பெற்றுள்ளார். அவரை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவர் 29ஆம் திகதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.