அரசியல் கைதிகள் கோத்தபாயவால் விடுவிக்கப்படுவர்: நம்பிக்கை வெளியிடும் : வண.பிதா சக்திவேல்

breaking
தமிழ், - முஸ்லிம் மக்­களை தம்­முடன் ஒன்­றி­ணை­யு­மாறு ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ அழைப்பு விடுத்­தமை வர­வேற்­கத்­தக்­கது என்று தெரி­வித்த அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் வண. பிதா சக்­திவேல் புதிய ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்பார் என நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்தார். ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்த­பாய ராஜ­ பக்ஷ பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அரசியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான அமைப்பின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் இது தொட ர்பில் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ தமிழ் மக்­க­ளையும் தன்­னுடன் ஒன்­றி­ண­யு­மாறு அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். இந்­நி­லை யில் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தி க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் ஆட்­சிக்­ கா­லத்­திலும் வேண்­டு­கோள்­களை முன் ­வைத்­தி­ருந்தோம். இருப்­பினும் தகுந்த தீர்வு எமக்கு கிடைக்­க­வில்லை. இந்­நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன ஆட்­சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டின் முற்­ப­குதியில் அர­சியல் கைதி­யொ­ருவர் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். ஆகவே, ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இத்­த­கைய கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும் என்று தெளி­வாக தெரி­கின்­றது. அந்தவகையில் புதிய ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதி­களின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்ளது. தமிழ் மக்கள் அவ­ருடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மாயின் அர­சியல் ரீதி­யான அவர்­க­ளு­டைய பிரச்சி னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம் பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அந்தவகையில் புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப் பார் என நம்புகின்றோம்.