சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்ககோரி ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கடிதம் மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று பகல், ரணிலை எதிர்க்கட்சி தலைவராக்க குறிப்பிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதையடுத்து, 45 உறுப்பினர்களின் கையொப்பத்துடன், சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐ.தே.கவிற்குள் பெரும் பூகம்பம் வெடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.